நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
நீட் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளது குறித்து...
நீட் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 23) அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
''நாட்டின் இளைஞர்களின் நலனும் எதிர்காலமும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும்.
Advertisement
Advertisement
வினாத்தாள் கசிவு சம்பவங்களில் வழக்குகளுக்கு விரைவான தீர்வு காண்பதையும், குற்றவாளிகளுக்கு விரைவான, கடுமையான தண்டனை வழங்குவதையும் உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துவரும் தொடர் முடிவுகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் யாரும் தப்பிக்க விடப்பட முடியாது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.