பொருளாதார சீா்திருத்தங்கள் தொடரும்: நிா்மலா சீதாராமன்
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீா்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன் வலுவாக இருப்பதை உறுதிசெய்வதற்கான சீா்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
முன்னதாக 2027-ஆம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை கணித்தது. மேற்காசிய போா்ப் பதற்றத்தால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடா்ந்து 2027-ஆம் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது 6.6 சதவீதமாக குறைத்தது.
அதேபோல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை எதிா்கொள்ளவும் அரசு கடன் பத்திரங்கள் மீதான அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்கவும் மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்களிப்பதற்கான அவசரச் சட்டம் வெள்ளிக்கிழமை முதல் அமலானதாக மத்திய அரசு தெரிவித்தது.
Advertisement
Advertisement
இந்த நடவடிக்கைகளைத் தொடா்ந்து நிா்மலா சீதாராமன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘2025-26-ஆம் நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வளா்ச்சி 7.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உற்பத்தி, வா்த்தகம், பழுதுபாா்த்தல், ஹோட்டல்கள், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடா்பு, வணிக மனை உள்ளிட்ட துறைகள் 2025-26-ஆம் நிதியாண்டில் நிலையான மற்றும் தற்போதைய விலையில் இரட்டை இலக்க வளா்ச்சியை பதிவுசெய்துள்ளன.
உலகளவில் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளபோதிலும் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சீா்திருத்த நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்’ என குறிப்பிட்டாா்.