முகப்பு
இந்தியா

உ.பி. சாலை விபத்து: பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் - பிரதமர்

உ.பி.யில் சாலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்தது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி நிவாரணத்தொகையையும் அறிவித்தார்.

சிசையா-லக்கிம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் ஒன்று லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் திங்கள்கிழமை பத்து பேர் பலியாகினர்.

லக்கிம்பூர் கேரியின் மாவட்ட ஆட்சியர் அஞ்சனி குமார் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், எதிர்திசையில் வந்த லாரியுடன் வேன் மோதியதில், ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், ஒருவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, “உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நடந்த விபத்து குறித்து கேள்விப்பட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

பலியான ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.