முகப்பு
இந்தியா

சத்தீஸ்கர்: வெப்ப அலைக்கு 200 வௌவால்கள் உயிரிழப்பு!

சத்தீஸ்கரின் கோர்பாவில் கடும் வெப்ப அலை காரணமாக 200 வௌவால்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்.
பகிர்:

சத்தீஸ்கரின் கோர்பாவில் கடும் வெப்ப அலை காரணமாக 200 வௌவால்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், கோர்பா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சுமார் 200 வௌவால்கள் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடும் வெப்ப அலையே இதற்குக் காரணம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பாலி நகர் பஞ்சாயத்தில் உள்ள நௌகோனியா குளக்கரையில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் தஞ்சம் புகுந்திருந்தன.

அதில், ஏராளமான வௌவால்கள் சனிக்கிழமை தரையில் இறந்து கிடப்பதாகவும், பல வௌவால்கள் மரங்களில் உயிரற்றுக் தொங்குவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனத் துறையினர் விரைந்தனர் என்று கட்கோரா பிரிவு வன அதிகாரி குமார் நிஷாந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சுமார் 200 வௌவால்கள் உயிரிழந்துள்ளன. மேலும் அவை வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. இறப்பிற்கான சரியான காரணத்தைக் கண்டறிய, கால்நடை மருத்துவத் துறை இறந்த உடல்களிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ளது என்றார்.

இதனிடையே வானிலை ஆய்வு மைய தகவலின்படி, கோர்பா பகுதியில் சனிக்கிழமை 42 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான வௌவால்கள் பாலிக்கு வந்து குளத்தைச் சுற்றி குடியேறும்.

இந்த ஆண்டு, அவற்றின் எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

summary

Nearly 200 bats have been found dead at a village in Chhattisgarh's Korba district, with officials suspecting heatwave conditions as the cause.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.