இலைகளின் இனிய பணி
எண்ண முடியா இலைகள் கொண்டே எல்லாச் செடிகளும்
எண்ண முடியா இலைகள் கொண்டே
எல்லாச் செடிகளும்
வண்ணப் பசுமை உடைகள் பூண்டே
உவகை காட்டுதே!
-
இலைகள் எல்லாம் இரவி நோக்கி
ஒளியை வாங்கியே
இனிமை மிக்கப் பச்சை யத்தை
உணவாய் ஆக்குதே!
-
ஆக்கிய உணவை ஆசை யோடு
யாருக்கு ஊட்டுது?
தூக்க மின்றி தம்மை வளர்த்தத்
தண்டிற்கு ஊட்டுதே!
-
தனக்குக் கிடைத்த நல்ல உணவால்
தண்டும் மகிழ்ந்தே
கணக்கே இன்றி பூவுக்கும் காய்க்கும்
கிளைக்கு அனுப்புதே!
-
நாமும் இந்த இலைகள்போல
நல்லன செய்தால்
நாளும் வளங்கள் நாட்டில் பெருகி
நமக்கே ஆகுமே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்