முகப்பு
குழந்தைகள் உலகம்

இலைகளின் இனிய பணி

எண்ண முடியா இலைகள் கொண்டே எல்லாச் செடிகளும்

Updated On : 1 மார்ச் 2026, 12:00 am IST
பகிர்:

எண்ண முடியா இலைகள் கொண்டே

எல்லாச் செடிகளும்

வண்ணப் பசுமை உடைகள் பூண்டே

Advertisement

Advertisement

உவகை காட்டுதே!

-

இலைகள் எல்லாம் இரவி நோக்கி

ஒளியை வாங்கியே

இனிமை மிக்கப் பச்சை யத்தை

உணவாய் ஆக்குதே!

-

ஆக்கிய உணவை ஆசை யோடு

யாருக்கு ஊட்டுது?

தூக்க மின்றி தம்மை வளர்த்தத்

தண்டிற்கு ஊட்டுதே!

-

தனக்குக் கிடைத்த நல்ல உணவால்

தண்டும் மகிழ்ந்தே

கணக்கே இன்றி பூவுக்கும் காய்க்கும்

கிளைக்கு அனுப்புதே!

-

நாமும் இந்த இலைகள்போல

நல்லன செய்தால்

நாளும் வளங்கள் நாட்டில் பெருகி

நமக்கே ஆகுமே!

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments