முகப்பு
குழந்தைகள் உலகம்

இலைகளின் இனிய பணி

எண்ண முடியா இலைகள் கொண்டே எல்லாச் செடிகளும்

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 6:30 PM
பகிர்:

எண்ண முடியா இலைகள் கொண்டே

எல்லாச் செடிகளும்

வண்ணப் பசுமை உடைகள் பூண்டே

உவகை காட்டுதே!

-

இலைகள் எல்லாம் இரவி நோக்கி

ஒளியை வாங்கியே

இனிமை மிக்கப் பச்சை யத்தை

உணவாய் ஆக்குதே!

-

ஆக்கிய உணவை ஆசை யோடு

யாருக்கு ஊட்டுது?

தூக்க மின்றி தம்மை வளர்த்தத்

தண்டிற்கு ஊட்டுதே!

-

தனக்குக் கிடைத்த நல்ல உணவால்

தண்டும் மகிழ்ந்தே

கணக்கே இன்றி பூவுக்கும் காய்க்கும்

கிளைக்கு அனுப்புதே!

-

நாமும் இந்த இலைகள்போல

நல்லன செய்தால்

நாளும் வளங்கள் நாட்டில் பெருகி

நமக்கே ஆகுமே!

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

முழு கட்டுரையைப் படிக்க →