அனுமதியின்றி கருவேல மரங்கள் ஏற்றி வந்த மூன்று லாரிகள் பறிமுதல்
பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.குருநாதன் வெங்கலமேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே கருவேல மரக்கட்டைகள் ஏற்றி வந்த மூன்று லாரிகளை சோதனை
பொன்னமராவதி அருகே சனிக்கிழமை இரவு அனுமதியின்றி கருவேல மரங்கள் ஏற்றி வந்த மூன்று லாரிகள் வட்டாட்சியரால் பறிமுதல் செய்யப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பொன்னமராவதி வட்டாட்சியர் எம்.குருநாதன் வெங்கலமேடு பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே கருவேல மரக்கட்டைகள் ஏற்றி வந்த மூன்று லாரிகளை சோதனை செய்தார்.அப்போது அனுமதியின்றி விறகு ஏற்றி வந்தது தெரியவந்தினால் லாரிகளை பறிமுதல் செய்து பொன்னமராவதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.