விஷம் குடித்து பெண் தற்கொலை
அரூர் வட்டம், போளையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பூவால். இவரது மனைவி ருக்கு (65). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டாராம். பல்வேறு இடங்களில் மருத்துவச் சிகிச்சைப்
கம்பைநல்லூர் அருகே விஷம் பெண் ருக்கு (65) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரூர் வட்டம், போளையம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பூவால். இவரது மனைவி ருக்கு (65). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டாராம். பல்வேறு இடங்களில் மருத்துவச் சிகிச்சைப் பார்த்தும் உடல் நிலை சரியாகவில்லையாம்.இந்த நிலையில், தனிமையில் இருந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு மொரப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக 108 மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
இச் சம்பவம் குறித்து அவரது மகன் மாயக்கண்ணன் (36) அளித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Advertisement
Advertisement