முகப்பு
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதல்: தொழிலாளி சாவு

அரூர் வட்டம், பையர்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கிருஷ்ணன் (35). இவர் தமது மோட்டார் சைக்கிளில் தீர்த்தமலை-நரிப்பள்ளி சாலையில், நரிப்பள்ளியில் இருந்து பையர்நாய்கன்பட்டி

Updated On : 9 செப்டம்பர் 2013, 4:50 pm IST
பகிர்:

அரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பேருந்து மோதியதில் தொழிலாளி கிருஷ்ணன் (35) உயிரிழந்தார்.

அரூர் வட்டம், பையர்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கிருஷ்ணன் (35). இவர் தமது மோட்டார் சைக்கிளில் தீர்த்தமலை-நரிப்பள்ளி சாலையில், நரிப்பள்ளியில் இருந்து பையர்நாய்கன்பட்டி கிராமம் நோக்கிச் சென்றுள்ளார்.அப்போது மோட்டூர் பாலம் அருகே எதிரே நரிப்பள்ளி நோக்கி வந்த தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச் சம்பவம் குறித்து பையர்நாய்க்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கவுண்டர் மகன் கமலேசன் (36) அளித்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.