முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைப்பு: 4 பேர் மீது வழக்குப் பதிவு

அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தில் அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து சிலர் பூஜைகள் செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து கே.ஈச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆர்.சிவக்குமார் அளித்த

Updated On : 10 செப்டம்பர் 2013, 6:25 pm IST
பகிர்:

அரூர் அருகே அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக 4 பேர் மீது போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தில் அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து சிலர் பூஜைகள் செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து கே.ஈச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆர்.சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், லோகநாதன், சீனிவாசன், மாரியப்பன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இச் சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.