அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைப்பு: 4 பேர் மீது வழக்குப் பதிவு
அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தில் அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து சிலர் பூஜைகள் செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து கே.ஈச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆர்.சிவக்குமார் அளித்த
அரூர் அருகே அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக 4 பேர் மீது போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தில் அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து சிலர் பூஜைகள் செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து கே.ஈச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆர்.சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், லோகநாதன், சீனிவாசன், மாரியப்பன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இச் சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.