FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவிக்கு கொடுமை: கணவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவியை கொடுமை செய்ததாக அவரது கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 12 செப்டம்பர் 2013, 4:01 pm IST
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவியை கொடுமை செய்ததாக அவரது கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

 பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சுங்கரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமி மகன் ராசு (23). இவரது மனைவி எழில்அரசி (20). இந்த தம்பதியருக்கு கடந்த 7.11.2011-ல் திருமணம் நடைபெற்றதாம்.

 இந்த நிலையில், ராசு அவரது மனைவி எழில்அரசியை அடித்துக் கொடுமை செய்தாராம். மேலும் அவர் 17 வயதுடைய யாழினி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டாராம்.

Advertisement

Advertisement

 2-ம் திருமணம் செய்து கொண்டது குறித்து அவரது மனைவி எழில்அரசி கேட்டதற்கு அவரது  குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

 இச் சம்பவம் குறித்து எழில்அரசி அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் ராசு (23)- வை அரூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments