முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவிக்கு கொடுமை: கணவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவியை கொடுமை செய்ததாக அவரது கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 12 செப்டம்பர் 2013, 4:01 pm IST
பகிர்:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவியை கொடுமை செய்ததாக அவரது கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

 பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சுங்கரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமி மகன் ராசு (23). இவரது மனைவி எழில்அரசி (20). இந்த தம்பதியருக்கு கடந்த 7.11.2011-ல் திருமணம் நடைபெற்றதாம்.

 இந்த நிலையில், ராசு அவரது மனைவி எழில்அரசியை அடித்துக் கொடுமை செய்தாராம். மேலும் அவர் 17 வயதுடைய யாழினி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டாராம்.

Advertisement

Advertisement

 2-ம் திருமணம் செய்து கொண்டது குறித்து அவரது மனைவி எழில்அரசி கேட்டதற்கு அவரது  குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

 இச் சம்பவம் குறித்து எழில்அரசி அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் ராசு (23)- வை அரூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.