மனைவிக்கு கொடுமை: கணவர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவியை கொடுமை செய்ததாக அவரது கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே மனைவியை கொடுமை செய்ததாக அவரது கணவரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சுங்கரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமி மகன் ராசு (23). இவரது மனைவி எழில்அரசி (20). இந்த தம்பதியருக்கு கடந்த 7.11.2011-ல் திருமணம் நடைபெற்றதாம்.
இந்த நிலையில், ராசு அவரது மனைவி எழில்அரசியை அடித்துக் கொடுமை செய்தாராம். மேலும் அவர் 17 வயதுடைய யாழினி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டாராம்.
Advertisement
Advertisement
2-ம் திருமணம் செய்து கொண்டது குறித்து அவரது மனைவி எழில்அரசி கேட்டதற்கு அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.
இச் சம்பவம் குறித்து எழில்அரசி அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் ராசு (23)- வை அரூர் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர்.