திண்டுக்கல் அருகே பேருந்து விபத்து: ஒருவர் பலி- 19பேர் படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்து உள்ள ஐயர் மடம் என்ற இடத்தில் கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்து உள்ள ஐயர் மடம் என்ற இடத்தில் கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை வேடசந்தூர் அரசு மருத்தவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 18வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.