சுத்தியலால் அடித்து அண்ணன் கொலை தம்பி கைது
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள படைநிலை காலனி தெருவை சேர்ந்த ராசாங்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி(48). இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே அண்ணனை சுத்தியலால் அடித்து கொலை செய்த தம்பியை மீன்சுருட்டி போலீசார் ஞாயிற்றுகிழமை கைதுசெய்தனர்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள படைநிலை காலனி தெருவை சேர்ந்த ராசாங்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி(48). இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்திக்கும் தம்பி மனைவி கசப்பாயிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதையறிந்த தம்பி சக்ரவர்த்தி(48) பலமுறை அண்ணனை கண்டித்துள்ளார். ஆனால் கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தம்பி மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததால் ஞாயிற்றுகிழமை அதிகாலை 3.30 மணியளவவில் வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த அண்ணனை தலையில் சுத்தியலால் தாக்கினார். இதனால் காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுகிழமை இரவு 7 மணியளவில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸார் சக்கரவர்த்தியை கைதுசெய்து விசாரிக்கின்றனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.