முகப்பு
தற்போதைய செய்திகள்

போர் மற்றும் ஆயுத மோதல்கள் சூழலில் சுரண்டல் தடுக்கும் சர்வதேச தினம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,

Updated On : 6 நவம்பர் 2014, 12:18 pm IST
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், போர் மற்றும் ஆயுத மோதல்கள் சூழலில் சுரண்டல் தடுக்கும் சர்வதேச தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா முன்னிலை வகித்தார். ஆசிரியை ந.ரெங்கலதா வரவேற்றார்.

Advertisement

Advertisement

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற  நல்லாசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

உலகில் போர்கள் நடைபெறும் போது, இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது. மரம், வைரங்கள், தங்கம் போன்ற உயர்-மதிப்பு வளங்கள் மற்றும் எண்ணெய், அல்லது அத்தகைய வளமான நிலம் மற்றும் நீர் போன்ற வளங்களை சுரண்டப்படுகிறது. இதுபோன்று இயற்கை வளங்களை சுரண்டுவது சம்பந்தப்பட்ட மோதல்களின் மீட்சியை இருமடங்கு ஆக்கிவிடுகிறது.

வாழ்வாதாரங்களை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன என்றால் எந்த நீடித்த அமைதி இருக்க முடியாது. இதனைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு ஆண்டுதோறும் நவம்பர் 6-ம் தேதியை போர் மற்றும் ஆயுத மோதல்கள் சூழலில் சுரண்டல் தடுக்கும் சர்வதேச தினமாக அறிவித்துள்ளது என்றார் அவர். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை ச.பொன்மலர் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.