முகப்பு
தற்போதைய செய்திகள்

போர் மற்றும் ஆயுத மோதல்கள் சூழலில் சுரண்டல் தடுக்கும் சர்வதேச தினம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:19 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், போர் மற்றும் ஆயுத மோதல்கள் சூழலில் சுரண்டல் தடுக்கும் சர்வதேச தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா முன்னிலை வகித்தார். ஆசிரியை ந.ரெங்கலதா வரவேற்றார்.

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற  நல்லாசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

உலகில் போர்கள் நடைபெறும் போது, இயற்கை வளங்கள் சுரண்டப்படுகிறது. மரம், வைரங்கள், தங்கம் போன்ற உயர்-மதிப்பு வளங்கள் மற்றும் எண்ணெய், அல்லது அத்தகைய வளமான நிலம் மற்றும் நீர் போன்ற வளங்களை சுரண்டப்படுகிறது. இதுபோன்று இயற்கை வளங்களை சுரண்டுவது சம்பந்தப்பட்ட மோதல்களின் மீட்சியை இருமடங்கு ஆக்கிவிடுகிறது.

வாழ்வாதாரங்களை மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன என்றால் எந்த நீடித்த அமைதி இருக்க முடியாது. இதனைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவற்காக ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு ஆண்டுதோறும் நவம்பர் 6-ம் தேதியை போர் மற்றும் ஆயுத மோதல்கள் சூழலில் சுரண்டல் தடுக்கும் சர்வதேச தினமாக அறிவித்துள்ளது என்றார் அவர். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை ச.பொன்மலர் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →