எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
சேலம் மாவட்டம் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சேலத்தை அடுத்த எடப்பாடியில் உள்ள தேவகிரி அம்மன் பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
முதல்வருடன் அமைச்சர்கள் தங்கமணி, சேவூர் ராமசந்திரன் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பங்கேற்றதை அடுத்து அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.