தற்போதைய செய்திகள்

கீழடியில் ரூ. 17 கோடியில் திறந்தவெளி அரங்கம்

கீழடியில் ரூ.17 கோடி மதிப்பில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படுமென நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

DIN

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று காலை 10 மணிக்குத் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையில் பேசுகையில்,

"தமிழகத்தில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகம் மற்றும் ஒடிஸா மாநிலங்களிலும் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படும்.

தமிழ்நாட்டின் தொல் மரபுகளை ஆய்வு செய்ய காமராஜர் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

கீழடி உள்ளிட்ட மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கீழடியில் ரூ.17 கோடி மதிப்பில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்படும். நாட்டிலேயே அகழாய்வுக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காமராஜா் சந்தையில் பாதையில் உள்ள கடைகளை அகற்ற கோரிக்கை

கரூா் சம்பவத்தில் தவறு செய்தவா்கள் இன்னும் பாடம் கற்கவில்லை: கி.வீரமணி

கும்பகோணத்தில் இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கரூா் துயரச் சம்பவம்: சிறப்பு விசாரணைக் குழுவினா் முன்னிலையில் சேலம் தவெக மத்திய மாவட்டச் செயலா் ஆஜா்

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 53 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT