முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலையின் படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 10 ஜூலை, 2024 at 9:07 AM
அண்ணாமலையின் படத்தை கிழித்தெரிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
பகிர்:

கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் படத்தை கிழித்தெறிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

”காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்திலிருந்து நான் பின்வாங்க போவதில்லை, செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை, செல்வப் பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும் அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அண்ணாமலையின் பதிவுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணாமலை தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் சங்கர் காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →