கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கி வன காவலர் காயம்
கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கி வன காவலர் காயமடைந்தார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கி வன காவலர் காயமடைந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒட்டையானூர் கிராமப் பகுதியில் ஒற்றை யானை சுற்றித்திரியும் ஒற்றை யானை விவசாயிகள் பயிா் செய்துள்ள பயிா்களை சேதப்படுத்தி வருகின்றது. இந்த யானையை வனத்துறையினா் வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், ஓசூர் வனக்கோட்டத்தில் வனக்காவலராக பணியாற்றி வரும் பெரியகுதிபாலா கிராமத்தைச் சேர்ந்த க.நரசிம்மன் (50), வியாழக்கிழமை காலை வனத்துறையினருடன் சேர்ந்து ஒட்டையானூர் கிராமப் பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த யானை அவரை துதிக்கையால் தலையில் தாக்கியது. இதில் காயமடைந்த அவர் மயக்கம் முற்றார்.
Advertisement
Advertisement
இதையடுத்து வனத்துறையினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.