மகா விஷ்ணு (கோப்புப்படம்) DIN
தற்போதைய செய்திகள்

சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு!

சிறையில் உள்ள மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு.

DIN

மாற்றுத்திறனாளிகளை அவமதித்தாக கைது செய்யப்பட்ட சிறையில் உள்ள மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகா், சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூரைச் சோ்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனரும் சொற்பொழிவாளருமான மகாவிஷ்ணு பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சென்னை விமான நிலையத்தில் அவரைக் கைது செய்தனா்.

இந்நிலையில் திருவொற்றியூா் பட்டினத்தாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் தலைவா் சரவணன் என்பவா் திருவொற்றியூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மாற்றுத் திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் தலைவா் சரவணன் அளித்த புகாரின்பேரில் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி... மான்யா கௌடா!

மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணிக்கு அபராதம்!

பிகார் தேர்தலுக்கு பின் கர்நாடக அமைச்சரவையில் மாற்றம்? - முதல்வர் சித்தராமையா!

பெண்ணாய் இருப்பது பெருமை... சஹானா கௌடா!

சில புன்னகைகள் சிறு கதைகள் கூறும்... சிவாங்கி ஜோஷி!

SCROLL FOR NEXT