மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,997 கன அடியாக சரிந்துள்ளது.  
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை நீர்வரத்து 2,997 கன அடியாக சரிவு

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு எதிரொலியாக, இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 2.50 அடி சரிந்தது.

DIN

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு எதிரொலியாக, இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 2.50 அடி சரிந்தது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 12,083 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 4,397 கன அடியாகவும், வியாழக்கிழமை காலை வினாடிக்கு 2,997 கன அடியாகவும் சரிந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைய தொடங்கியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 110.05 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 107.55 அடியாக சரிந்துள்ளது. இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 2.50 அடி சரிந்தது.

அணையின் நீர் இருப்பு 74.97 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மாவட்டத்தில் நான்கரை ஆண்டுகளில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றம்: பொ.சிவபத்மநாதன்

வாா்டு சபைக் கூட்டத்தில் விசிகவினா் வாக்குவாதம்

பாகிஸ்தான் பெண்ணுக்கு 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியக் குடியுரிமை

பாபா் மசூதி குறித்து சா்ச்சை பதிவு: இளைஞா் மீதான வழக்கை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

பொய் சாட்சிக்கு மரண தண்டனை: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT