6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 
தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 24) முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு வியாழக்கிழமை காலை(ஜூலை 24) 10 மணி வரை நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, புறநகா் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Heavy rain is likely to occur at one or two places in the Nilgiris, Theni, Tenkasi, Kanyakumari, Coimbatore and Tirunelveli districts of Tamil Nadu for the next 3 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூதாட்டியிடம் நகை பறித்தவா் கைது

மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி உயிரிழப்பு

சீதாராம் யெச்சூரி நினைவு தினம் அனுசரிப்பு

வாழப்பாடி சாய்பாபா கோயில் ஏழாம் ஆண்டு கும்பாபிஷேக விழா

சேலம் மேற்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT