நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் இன்று தாமதமாகப் புறப்படும்!
நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் இன்று புறப்படும் நேரம் பற்றி...
நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் வந்தே பாரத் ரயில் இன்று 3 மணி நேரம் காலதாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
நாகர்கோவிலில் இருந்து இன்று(மே 3) பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில், 3 மணி நேரம் தாமதமாக மாலை 5.20 மணிக்குப் புறப்படும், இணைப்பு ரயில் காலதாமதமாக வருவதால் இன்று தாமதமாகப் புறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கன்னியாகுமரி - திப்ரூகர்க் விவேக் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.25 மணிக்குப் புறப்பட வேண்டிய நிலையில் 3 மணி நேரம் தாமதமாகஇரவு 8.25 மணிக்குப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.