முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் இன்று தாமதமாகப் புறப்படும்!

நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயில் இன்று புறப்படும் நேரம் பற்றி...

Updated On : 3 மே, 2025 at 6:55 AM
கோப்புப்படம்.
பகிர்:

நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் வந்தே பாரத் ரயில் இன்று 3 மணி நேரம் காலதாமதமாகப் புறப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

நாகர்கோவிலில் இருந்து இன்று(மே 3) பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில், 3 மணி நேரம் தாமதமாக மாலை 5.20 மணிக்குப் புறப்படும், இணைப்பு ரயில் காலதாமதமாக வருவதால் இன்று தாமதமாகப் புறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கன்னியாகுமரி - திப்ரூகர்க் விவேக் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.25 மணிக்குப் புறப்பட வேண்டிய நிலையில் 3 மணி நேரம் தாமதமாகஇரவு 8.25 மணிக்குப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →