மேட்டூர் அணை நீர்மட்டம் 4-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து நான்காவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது தொடர்பாக...
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை(அக்.23) 120 அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35,500 கனஅடியாக நீடிக்கிறது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,300 கனஅடி வீதமும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 12,700 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சி
மேட்டூரில் 67.4 மி.மீ. மழை பெய்துள்ளது.
summary