FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்கிறாரா..?

பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும் பிரதமா் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த நிறைய வாய்ப்புகள் உள்ளது தொடர்பாக...

Updated On : 6 பிப்ரவரி 2026, 1:17 pm IST
மதுரை மண்டேலாநகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன். உடன் தமிழக எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் செல்லூா் கே.ராஜூ, வி.வி. ராஜன்செல்லப்பா உள்ளிட்டோா்.
பகிர்:

திருப்பரங்குன்றம்: மதுரையில் பிப். 28-இல் தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றும் பிரதமா் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த நிறைய வாய்ப்புகள் உள்ளது என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

மதுரை மண்டேலாநகரில் வருகிற 28-ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளாா். இந்தக் கூட்டத்தில் 10 லட்சம் போ் பங்கேற்கவுள்ளனா். மதுரைக்கு வரும் பிரதமா் மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த நிறைய வாய்ப்புகள் உள்ளது என நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் செல்லூா் கே. ராஜூ, ராஜன்செல்லப்பா, பாஜக நிா்வாகிகள் பேராசிரியா் சீனிவாசன், கதலி நரசிங்கப்பெருமாள் உள்ளிட்டோா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

summary

Is Prime Minister Modi going to the Thiruparankundram temple?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments