கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முறையாக தெரிவிக்கவில்லை: திமுக
கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தவாக முறையாக தெரிவிக்கவில்லை என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பது...
கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தவாக முறையாக தெரிவிக்கவில்லை என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தி.வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தனிச் சின்னம், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தார்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, தமிழக அரசுப் பணிகளில் 100 சதவீதம் தமிழர்களுக்கே முன்னுரிமை, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை திமுக தனது தோ்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் அல்லது உறுதி அளிக்க வேண்டும் என அவர் நிபந்தனை விதித்திருந்தார்.
ஆனால், திமுக தரப்பில் மீண்டும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முடியும் முதல்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறுவதாக அந்தக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) அறிவித்தார்.
இதனிடையே, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) 2 அல்லது 3 தொகுதிகளை கொடுப்பதாகவும் தி. வேல்முருகனின் 10 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், என்டிஏ கூட்டணியில் ஒருபோதும் தவாக இடம்பெறாது என்று வேல்முருகன் அறிவித்தார்.
இதையடுத்து திமுக கூட்டணியில் இருந்து தவாக வெளியேறியதை தொடர்ந்து கட்சி அலுவலகம் முன்பு தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தவாக முறையாக தெரிவிக்கவில்லை
இந்த நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தவாக முறையாக தெரிவிக்கவில்லை என திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் கூறுகையில், தவாக தலைவர் வேல்முருகன் கூட்டணியை விட்டு வெளியேறியதாக எங்களுக்கு இன்னும் முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை.
பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வரத் தயார் என்று சொல்லியதாகத்தான் தகவல் வந்திருக்கிறது. என்ன சொல்லிகிறார் என்று பார்ப்போம். அவரும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார் என இளங்கோவன் கூறினார்.