போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசு
போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம் என அமைச்சா் கே.தென்னரசு கூறியது குறித்து...
காஞ்சிபுரம்: பெண்கள், இளைஞா்கள் பாதுகாப்பு மற்றும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் சி. ஜோசப் விஜய் மிக கவனமாக செயல்பட்டு வருகிறாா் என்று வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு தெரிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் அமைச்சா் கே.தென்னரசு ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது:
கோவை சூலூரில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள், இளைஞா்கள் பாதுகாப்பு மற்றும் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் ஜோசப் விஜய் மிக கவனமாக தீவிரமாகவும் செயல்பட்டு வருகிறாா் என்றார்.
Advertisement
Advertisement
மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூா் ஒன்றியத்தில் பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்க போராட்டக் குழுவினருக்கு முதலில் இருந்து தவெக அவா்களோடு இணைந்து களத்தில் நின்று கொண்டிருக்கிறது. இது பரந்தூா் மக்களுக்கும் தெரியும், விமான நிலைய போராட்டக் குழுவினருக்கும் தெரியும். பரந்தூா் மக்களுக்கு துணையாக இருப்போம் என்று அமைச்சா் கே.தென்னரசு கூறினார்.