FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உங்கள் கண்களில் கருவளையம் முற்றிலும் நீங்க சில எளிய பயிற்சிகள்!

கருவளையம் கண்களுக்கு திருஷ்டி போல் இருக்கும். சரியாக தூங்காமல், சிறு வயதிலிருந்தே கண்களுக்கு

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கருவளையம் கண்களுக்கு திருஷ்டி போல் இருக்கும். சரியாக தூங்காமல், சிறு வயதிலிருந்தே கண்களுக்கு ஓவர் டைம் வேலை கொடுத்து அல்லது எப்பவும் டிவி, மொபைல் என்றிருந்தால்  கண்களைச் சுற்றி கருவளையம் வந்துவிடும்.  

கருவளையம் நரம்புகளின் பலவீனத்தாலும் இறந்த செல்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கிவிடுவதாலும் உண்டாகும். இதனால் சிறு வயதிலேயே வயதான தோற்றம் அமைந்துவிடும்.  இதற்கு கண்களின் மீது  உருளைக் கிழங்கு, வெள்ளரிக்காய்,  தக்காளி என  வைத்தால் பலனளிக்கும்.  

சின்ன சின்ன பயிற்சிகள்  மூலமும் கருவளையத்தைப் போக்கிக் கொள்ளலாம். இந்தப் பயிற்சிகளினால் கண்பார்வை தெளிவாகும். நரம்புகள் ஊக்கம் பெறும், கண்கள் சுருக்கங்கள் மறைந்து  அழகு பெறும்.  

Advertisement

Advertisement

பயிற்சிகளை இப்போது கண்போம்:

பயிற்சி- 1 : கண்களை எவ்வளவு இறுக்க மூட  முடியுமோ, அவ்வளவு இறுக்க மூடி, அதே அளவு திறக்க வேண்டும். இப்படி மூன்று முறை செய்யவும்.       

பயிற்சி- 2 : கண்களை மேலிருந்து வலப்புறமாக சுழற்றவும் இது போல் ஐந்து முறை செய்யவும்.  இடப்புறமாக அதே போன்று  சுழற்றவும். ஐந்து முறை செய்ய வேண்டும்.

பயிற்சி- 3 : இரு கண்களையும் உள்ளங்கையால் மூடி சில நொடிகள் கழித்து திறந்திடுங்கள். இவ்வாறு ஐந்து முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 4 : இரவு தூங்குவதற்கு முன் கண்களைச் சுற்றி லேசாக கைகளால் ஒத்தி எடுக்க வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். விளக்கெண்ணெய் இருந்தால் அதனை கொண்டு  கண்களைச் சுற்றி மசாஜ் செய்யலாம்.

மேலே கூறியவைகளை விடாமல் தினமும் செய்து கொண்டு வந்தால், சில நாள்களில் கருவளையம் மறைவதை காண்பீர்கள். கண்களும் அழகாக காட்சியளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments