தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும்
தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும் - தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ்; பக்.248; ரூ.275; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., நாகர்கோவில்-1; 04652 - 278525.
தமிழ்ச் சிறுகதை வரலாறும் விமர்சனமும் - தொகுப்பாசிரியர்: சுப்பிரமணி இரமேஷ்; பக்.248; ரூ.275; காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., நாகர்கோவில்-1; 04652 - 278525.
தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றை பல்வேறு கோணங்களில் தொகுத்துக் கூறும் முயற்சியாக இந்நூல் மலர்ந்திருக்கிறது.
கலை இலக்கியம் பற்றி வெவ்வேறு பார்வை
களைக் கொண்ட கா.நா.சுப்ரமண்யம் கட்டுரையும் கா.சிவத்தம்பி கட்டுரையும், கோ.கேசவனின் கட்டுரையும், சுந்தரராமசாமியின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. ராஜ்கெüதமன், பிரமிள், எம்.ஜி.சுரேஷ், ஜெயமோகன், நாஞ்சில்நாடன், அசோகமித்திரன், வீ.அரசு, இரா.கந்தசாமி, சுப்பிரமணி இரமேஷ் ஆகியோரின் கட்டுரைகள் தமிழ்ச் சிறுகதைகளின் வெவ்வேறு போக்குகளைப் பற்றி பேசுகின்றன.
மணிக்கொடி காலத்தில் வெளிவந்த சிறுகதைகள், வணிக இதழ்களில் வெளிவந்த சிறுகதைகள், முற்போக்கு சிறுகதைகள், எந்தவித மையமும் இல்லாமல் எழுதப்பட்ட பின்நவீனத்துவ சிறுகதைகள் என தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்த இந்நூல் உதவும்.
தற்காலப் பெண் சிறுகதைகள், பின் நவீனத்துவச் சிறுகதைகள், தலித் சிறுகதைகள், அக உலகைச் சித்திரிக்கும் சிறுகதைகள் என தமிழ்ச் சிறுகதைகளைப் பற்றியும், இலக்கியக் கோட்பாடுகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள இந்நூலில் உள்ள கட்டுரைகள் உதவுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.