திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி இன்று மாலை அன்னையிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்வு
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் முருகப்பெருமான் வேல்வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் முருகப்பெருமான் வேல்வாங்கும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.
கந்தசஷ்டி விழா கடந்த 8-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், விழாவையொட்டி தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனையும் தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடைபெறும்.
மேலும், தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று மாலை 6.30 மணியிலிருந்து இரவு 7.30 மணிக்குள் சூரனை வதம் செய்வதற்காக முருகப்பெருமான் தனது தாயாரான அன்னையிடம் இருந்து சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நாளை மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.