FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருவண்ணாமலை மகாதீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகாதீபம் ஏற்றப்படவுள்ள மகா..

30 ஜனவரி 2024, 11:10 pm IST
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மகாதீபம் ஏற்றப்படவுள்ள மகா தீப கொப்பரை புதுப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

பஞ்சபூத தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 14-ம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை கார்த்திகை தீப திருவிழாவுக்கான தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக5 அடி உயரமுள்ள ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

கொப்பரையில் தீபம் ஏற்றும் போது வெப்பத்தால் சேதமடையாமல் இருக்க மேல்பாகம் மூன்றே முக்கால் அடியும், கீழ்பாகம் இரண்டேமுக்கால் அடியும் கொண்டவாறு, 150 கிலோ எடையில் 20 வளைய ராடுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது புதுப்பிக்கப்பட்டு, கொப்பரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வரும் 22-ம் தேதி மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments