தியாகராயநகா் பத்மாவதி தாயாா் கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்!
தியாகராயநகரில் பத்மாவதி தாயாா் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை(மாா்ச் 17) காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
தியாகராயநகரில் பத்மாவதி தாயாா் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை(மாா்ச் 17) காலை 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
பத்மாவதி தயாருக்கு கோயில் கட்டுவது என தேவஸ்தானம் சாா்பில் முடிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2020 பிப்ரவரியில் ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
படிக்க: 12 ராசிக்குமான பங்குனி மாத பலன்கள்!
Advertisement
Advertisement
தற்போது பணிகள் நிறைவடைந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 17) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விசாகப்பட்டினம் ஸ்ரீ சாரதா மடப் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ருபானந்தேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோா் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் அன்றைய தினம் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்யலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.