FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கரந்தை திரௌபதி அம்மன் ஆலயத்தில் காளி புறப்பாடு!

கரந்தையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் காளி புறப்பாடு நடைபெற்றது.

Updated On : 21 ஜூலை 2026, 3:18 pm IST
கரந்தை திரௌபதி அம்மன் - video crop
பகிர்:

கரந்தையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் காளி புறப்பாடு நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக ஆடி வந்த காளியை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் மகாபாரத கதை உபன்யாசம் மற்றும் தீமிதி திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதேபோல் கடந்த ஜூன் 29 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா விழா தொடங்கியது. இதையடுத்து கிருஷ்ணன் வரலாறு, தருமர் பிறப்பு, அம்மன் பிறப்பு, சுபத்ரா கல்யாணம், பாஞ்சாலி சபதம் என மகாபாரத கதைகள் நடைபெற்றது. 

இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காளி புறப்பாடு நடைபெற்றது‌. ஆலயத்தில் இருந்து புறப்பட்ட காளி தஞ்சாவூர் மாநகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சுவாமிக்கு பூஜைகள் செய்து வீதிகளில் ஆடி வந்த காளி அம்மனை தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments