FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மல்லுக்கட்டும்  ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி 

6 ஆகஸ்ட் 2025, 5:46 pm IST
பகிர்:
ஏறுதழுவுதல் என்பது தமிழர்களிடையே 
இன்றல்ல என்றும் நடைமுறையில் உள்ளது !
எதற்காக  தடை   செய்கிறார்கள் என்று 
எண்ணிப் பார்த்தால் விளங்கியது சதி !
உலகமயம் என்ற அரக்கனின்  வேலை   
உள்ளூர் நாட்டு மாடுகள் அழிப்பு வேலை !
மேலோட்டமாகப் பார்த்தால் இத்தடை 
மாடுகள் காப்புப் போலத்தான் தெரியும்  !
உள்குத்து வேலை ஆராய்ந்தால் புரியும் 
ஒருவழியாக காளை இனத்தை அழித்தல் ! 
காட்டு விலங்கு அல்ல காளை 
வீட்டு உறுப்பினர் எங்கள் காளை !

தமிழனின் தன்னிகரில்லா வீரத்தை  வியந்து 
தரணி பாராட்டுவது பொறுக்கவில்லை !
கொட்டக்  கொட்டக் குனிபவன் அல்ல 
கொட்டம் அடக்கப் புறப்பட்டு விட்டோம் !
எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் என்று 
எங்கள் மீது தப்புக்கணக்கு வேண்டாம் !
பொறுமைக்கும் ஒரு எல்லை  உண்டு 
பொங்கி எழுந்தால் தாங்க  மாட்டீர்கள் !
தமிழன் என்றால் இளித்தவாயன் என்று 
தவறாக என்ன வேண்டாம் விழித்து விட்டோம் !
தடையை நீக்குவதைத் தவிர வழியில்லை 
தடையை நீக்கினால் மதிப்புறும் நீதிமன்றம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments