14 பந்துகளில் அரைசதம்: டி10 கிரிக்கெட்டில் அசத்தும் ஜோஸ் பட்லர்..!
இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் டி10 கிரிக்கெட்டில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் டி10 கிரிக்கெட்டில் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்.
அபுதாபியில் நடைபெறும் டி10 கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். 14 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
டெக்கன் கிளாடியேடர்ஸ் அணியில் விளையாடும் பட்லர் சென்னை ப்ரேவ் ஜாகுவர்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மொத்தமாக 24 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அதில் 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும்.
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய சென்னை ப்ரேவ் அணி 10 ஓவர்களுக்கு 141/2 ரன்கள் எடுத்தது. இதில் வன் டர் டுசென் 62 (29), கிறிஸ் லின் (28) ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
அடுத்து விளையாடிய டெக்கன் கிளாடியேட்டர்ஸ் அணியில் காட்மோர் 51 (24), பட்லர் 62 (24), ரைலி ரோஸ்ஸோவ் 16 (5) எடுத்தார்கள். 2 பந்துகள் மீதமிருக்க போட்டியில் வென்றார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.