ரிஷப் பந்த் படம்: ஏபி
கிரிக்கெட்

அதிவேகமாக அரைசதம்..! ரிஷப் பந்த் புதிய சாதனை!

இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார்.

DIN

இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார்.

விராட் கோலி ஆட்டமிழந்தவுடன் களமிறங்கிய ரிஷப் பந்த் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார்.

தொடர்சியாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ரிஷப் பந்த் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

அதிவேகமாக (28 பந்துகள்) அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனை இதற்கு முன்பு அவரிடமே இருந்தது. தற்போது, 29 பந்துகளில் அடித்து சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கம்மின்ஸ் வீசிய 22.2ஆவது பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். 33 பந்துகளில் 61ரன்கள் எடுத்து இந்தியாவின் பக்கம் ஆட்டத்தை திருப்பியுள்ளார்.

இந்திய அணி 25 ஓவர்கள் முடிவில் 128/5 ரன்கள் எடுத்துள்ளது. நிதீஷ் ரெட்டி 4 ரன்களுடனும் ஜடேஜா 2 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

இந்திய அணி 132 ரன்கள் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர்கள்

28 பந்துகள் - ரிஷப் பந்த் (2022)

29 பந்துகள் - ரிஷப் பந்த் (2025)

30 பந்துகள் - கபில் தேவ் (1982)

31 பந்துகள் - ஷர்துல் தாக்குர் (2021)

31 பந்துகள் - ஜெய்ஸ்வால் (2024)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT