கே.எல்.ராகுல் - ஷுப்மன் கில் இணை நிதான ஆட்டம்: பரபரப்பான கட்டத்தில் 4-ஆவது டெஸ்ட்!
அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடும் கே.எல்.ராகுல் - ஷுப்மன் கில் இணை!
இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நான்காம் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா இன்னும் 225 ரன்கள் பின்தங்கியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் ரன் வேட்டை நடத்தியதல் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களை குவித்தது.
இதைத்தொடர்ந்து, இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் இமாலய இலக்கை சேஸிங் செய்த முதல் ஓவரிலேயே 2 முக்கிய விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு கைகோத்த கே.எல்.ராகுல் - ஷுப்மன் கில் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
England vs India, 4th Test India trail by 225 runs
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.