FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

டி20 தொடர்: ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியினர்!

ஜிம்பாப்வேவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கிறது.

Updated On : 1 ஏப்ரல் 2026, 3:09 pm IST
2024 ஆம் ஆண்டில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணியினர்.
பகிர்:

ஜிம்பாப்வேவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கிறது.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்திய அணியினர் ஆண்டுதோறும் டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றனர். இந்தத் தொடர்களுக்கான வளர்ந்து வரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.

அந்த வகையில், நிகழாண்டுக்கான ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் விவரங்கள் வெளியாகியுள்ளன. ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

2026 முதல் 2027 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இவ்விரு அணிகளும் இரண்டு தொடர்களில் விளையாடுகின்றன. இந்திய அணி முதல் தொடரில் ஜூலை 23, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் விளையாடுகிறது. இந்த மூன்று போட்டிகளும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் திடலில் நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து இந்தியா வரும் ஜிம்பாப்வே அணியினர் ஜனவரி 3, 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் மும்பையில் நடைபெற உள்ளன.

டி20 சாம்பியனான இந்திய அணி, கடந்த 2024 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது முதல் தொடராக ஜிம்பாப்வேவுடன் விளையாடியிருந்தது. அதில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

India will head to Zimbabwe for a three-match T20I series in July for their first assignment since clinching their World Cup title this year.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments