ஐபிஎல் விதிமுறைகள் மீறலால் ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப் பந்துவீச்சாளருக்கு அபராதம்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் நான்ரே பர்கருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு லக்னௌவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 159/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய நான்ரே பர்கர் 4 ஓவர்களில் 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
Advertisement
லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் விக்கெட்டை எடுத்த உற்சாகத்தில், ரிஷப் பந்த்தைப் பார்த்து மோசமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியதும் தவறான செய்கையைக் காண்பித்தார்.
இந்தக் காரணத்தினால், 30 வயதான நான்ரே பர்கருக்கு ஐபிஎல் நடத்தை விதி மீறல் 2.5ன் படி போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதமும் ஒரு அபராத புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
குறைவான ரன்களை இலக்காக நிர்ணயித்தும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.