FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஸ்பெஷல்

5-ஆவது முறை ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழப்பாரா கோலி?

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:51 pm IST
பகிர்:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பார்மிங்ஹாமில் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி 2-ஆம் நாள் உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 9, துணைக் கேப்டன் ரஹானே 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னணி பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் விராட் கோலி இதுவரை மொத்தம் 50 பந்துகளை மட்டும் சந்தித்து 19 ரன்கள் மட்டுமே எடுத்து 4 முறை ஆட்டமிழந்துள்ளார்.

கடந்த 2014 தொடரின் போது விராட் கோலி பெரிதாக சோபிக்கவில்லை. இருப்பினும் கடந்த 3 சீசன்களாக அவரது ஆட்டம் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்து வருகிறது. அதுபோல காயம் காரணமாக மிக நீண்ட ஓய்வில் இருந்து ஆண்டர்சனும் தற்போதுதான் விளையாடுகிறார்.

எனவே இவ்விரு வீரர்களுக்கு இடையிலான சவால்கள் இந்த தொடரின் 5 போட்டிகளில் கடுமையாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதுபோல ரசிகர்களும் இதை மிக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments