FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஸ்பெஷல்

2000-க்கு பிறகு இந்திய துவக்க ஜோடியின் 'அடடே' சாதனை!

 முரளி விஜய், ஷிகர் தவன் துவக்க ஜோடி தலா 20, 26 ரன்களுடன் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:51 pm IST
பகிர்:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பார்மிங்ஹாமில் ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 80 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி 2-ஆம் நாள் உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி 9, துணைக் கேப்டன் ரஹானே 8 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 

Advertisement

Advertisement

இதில் முரளி விஜய், ஷிகர் தவன் துவக்க ஜோடி தலா 20, 26 ரன்களுடன் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் அந்நிய ஆடுகளங்களில் இந்த ஜோடி 3-ஆவது முறையாக முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்துள்ளது. முன்னதாக 2014-ல் பிரிஸ்பேன், அதே ஆண்டில் மெல்போர்ன் மற்றும் தற்போது பார்மிங்ஹாம் மைதானங்களில் எடுத்துள்ளனர். மொத்தம் 24-ஆவது முறையாக 50+ ரன்களை இந்த ஜோடி எடுத்துள்ளது. 

இந்நிலையில், 2000-ம் ஆண்டுக்கு பிறகு தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய துவக்க ஜோடி 10 ஓவர்களைக் கடந்து பேட்டிங் செய்தது இது 3-ஆவது முறையாகும்.

இந்த டெஸ்டில் விஜய், தவன் ஜோடி 13.4 ஓவர்கள் களத்தில் நின்றுள்ளது. முன்னதாக, 2003-ல் பிரிஸ்பேனில் சேவாக், சோப்ரா ஜோடி 19.2 ஓவர்களும், 2011-ல் லார்ட்ஸில் கம்பீர், முகுந்த் ஜோடி 18.2 ஓவர்களும் களத்தில் நின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments