FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டொரண்டோ மாஸ்டர்ஸ்: நடால், ஜோகோவிச் முன்னேற்றம்

டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் நடால், ஜோகோவிச் ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பந்தை விரட்டும் ரபேல் நடால்.
பகிர்:


டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் நடால், ஜோகோவிச் ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
கனடாவின் டொரண்டா நகரில் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. புதன்கிழமை இரவு நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரர் ரபேல் நடால் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பெனாயிட் பியரை வென்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். கடந்த 2005, 2008, 2013-இல் நடால் இங்கு பட்டம் வென்றிருந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்டேன் வாவ்ரிங்கா 1-6, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் மார்டன் புஸ்கோவிஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் வெரேவ் 6-4, 6-4 என பிராட்லியையும், 4 முறை சாம்பியன் ஜோகோவிச் 6-3, 6-4 என கனடா வீரர் பீட்டர் போலன்ஸையையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் ஜான் ஐஸ்நர் 7-6, 6-2 என பிரான்ஸின் ஹெர்பெர்டை வீழ்த்தினார். மூன்றாம் நிலை வீரர் டெல் பொட்ரோ காயம் காரணமாக வெளியேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments