துளிகள்...
துளிகள்...
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 2019 சீசனில் மோகன்பகான், ஈஸ்ட்பெங்கால் அணிகள் இடம் பெற வாய்ப்புள்ளது என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு பொதுச் செயலாளர் குஷால் தாஸ் தெரிவித்துள்ளார். ஐஎஸ்எல் லீக் மறுசீரமைப்புக்கு பின் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றியவுடன், மோகன்பகான், ஈஸ்ட்பெங்கால் அணிகள் இடம் பெறும் என்றார்.
பஞ்ச்குலாவில் புதன்கிழமை நடைபெற்ற ஐ-லீக் கால்பந்து, ஆட்டம் ஒன்றில் மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மினர்வா எஃப்சி அணியை வீழ்த்தியது.
தலைமைப் பயிற்சியாளர் ஜோஸ் மெளரின்ஹோ நீக்கப்பட்ட நிலையில் ப்ரீமியர் லீக் அணிகளில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் இடைக்கால பயிற்சியாளராக ஓலே குன்னர் சோல்காஜர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும் வரை குன்னர் இப்பொறுப்பில் நீடிப்பார்.
Advertisement
Advertisement
பாட்மிண்டன் வேர்ல்ட் டூர் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்ற பி.வி.சிந்து, மத்திய, மாநில அரசுகள், ஸ்பான்சர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தான் இந்திய வீரர்களின் வெற்றிக்கு ஊக்கமாக திகழ்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி தனது ஆக்ரோஷமான போக்கை கைவிடத் தேவையில்லை என முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான், பிரவீண்குமார் ஆகியோர் கூறியுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.