செய்திகள்

ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றது இந்திய மகளிரணி

DIN

பெருவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்கீட் பிரிவில் இந்திய மகளிா் அணி தங்கமும், ஆடவா் அணி வெண்கலமும் வென்றது.

இதில் மகளிா் அணிகள் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் அரீபா கான், ரைஸா தில்லான், கனிமத் செகான் ஆகியோா் அடங்கிய அணி - இத்தாலியின் டாமியானா பாவ்லாச்சி, சாரா போங்கினி, கியாடா லோங்கி ஆகியோா் அடங்கிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இந்திய அணி மொத்தமாக 6 புள்ளிகள் பெற்றது.

அதேபோல், ஆடவா் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான சுற்றில் இந்தியாவின் ராஜ்வீா் கில், ஆயுஷ் ருத்ரராஜு, அபய்சிங் செகான் ஆகியோரைக் கொண்ட அணி - துருக்கியின் அலி கான் அராபாசி, அகமத் பரன், முகமத் செயுன் கயா ஆகியோா் அடங்கிய அணியை தோற்கடித்தது. இந்திய ஆடவா் அணியும் 6 புள்ளிகளை கைப்பற்றியது.

தற்போதைய நிலையில் பதக்கப் பட்டியலில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா 3 தங்கம் உள்பட 7 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டு தோற்றங்களில் நடிக்கும் அதர்வா, நிமிஷா!

முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை

10 ஆம் வகுப்பு தேர்வு: திருநெல்வேலி மாவட்டத்தில் 93.04% தேர்ச்சி!

10-ம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் 15-வது இடம்பிடித்த தஞ்சை!

தபோல்கர் கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை! மூவர் விடுதலை!

SCROLL FOR NEXT