3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.
ராஞ்சியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இதனால் ஒருநாள் தொடர் 1-1 என சமன் ஆனது. 3-வது ஒருநாள் தில்லியில் இன்று நடைபெறுகிறது.
மழை காரணமாக டாஸ் நிகழ்வு சற்று தாமதமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக டேவிட் மில்லர் அறிமுகம் ஆகியுள்ளார். தெ.ஆ. அணியில் பவுமா, மஹாராஜ், ரபாடா ஆகியோர் இடம்பெறவில்லை.