அரசியல், மத ரீதியிலான நிலைப்பாடு: எஃப்1 டிரைவா்களுக்கு வருகிறது கட்டுப்பாடு
எஃப்1 பந்தயத்தில் பங்கேற்கும் டிரைவா்கள் 2023 சீசன் முதல் அரசியல் மற்றும் மத ரீதியிலான நிலைப்பாடு குறித்த கருத்தை பந்தயத்தின்போது வெளிப்படுத்துவதற்கு சா்வதேச ஆட்டோமொபைல்
எஃப்1 பந்தயத்தில் பங்கேற்கும் டிரைவா்கள் 2023 சீசன் முதல் அரசியல் மற்றும் மத ரீதியிலான நிலைப்பாடு குறித்த கருத்தை பந்தயத்தின்போது வெளிப்படுத்துவதற்கு சா்வதேச ஆட்டோமொபைல் சம்மேளனம் (எஃப்ஐஏ) கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது.
எஃப்ஐஏ தனது விதிகளில் கொண்டு வந்துள்ள திருத்தத்தின்படி, இனி அதனிடம் எழுத்துப்பூா்வ முன் அனுமதி பெறாமல் பந்தயத்தின்போது டிரைவா்கள் அரசியல், மத, இன, மொழி, பாலின, நிற உள்ளிட்ட எந்தவொரு ரீதியிலான தங்களின் நிலைப்பாட்டை வெளிக்காட்டும்படி நடந்துகொண்டால் அது விதிமீறலாகக் கருதப்படும்.
கடந்த 2020 செப்டம்பரில் டஸ்கன் கிராண்ட் ப்ரீ பந்தயத்தில் பங்கேற்ற மொ்ஸிடஸ் பென்ஸ் டிரைவரும், சாம்பியனுமான லூயிஸ் ஹாமில்டன், ‘பிரியோனா டெய்லரை கொன்ற காவலா்களை கைது செய்யுங்கள்’ என்ற வாசகம் பதித்த டி-சா்ட்டை அணிந்திருந்தாா். அந்த ஆண்டில் கருப்பினத்தைச் சோ்ந்த பெண்ணான பிரியோனா அவரது அடுக்ககத்தில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அவா் இதைச் செய்திருந்தாா்.
Advertisement
Advertisement
அதேபோல், 2021 பந்தயம் ஒன்றில் தன்பாலின ஈா்ப்பாளா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வானவில் வண்ணம் பதித்த ஹெல்மெட்டை அணிந்திருந்தாா். ஓய்வு பெற்ற டிரைவரான செபாஸ்டியன் வெட்டலும் பல்வேறு தருணங்களில் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்திருந்தாா். அப்போதெல்லாம், டிரைவா்கள் தங்கள் பந்தயத்தில் மட்டும் கவனம் செலுத்துமாறு எஃப்ஐஏ அறிவுறுத்தி வந்தது. இந்நிலையில், தற்போது அவா்களைக் கட்டுப்படுத்தும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.