முகப்பு
செய்திகள்

ஐஎஸ்எல்: மும்பையிடம் வீழ்ந்தது சென்னை (2-1)

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2022-23 தொடரின் ஒரு பகுதியாக மும்பையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி.

Updated On : 25 டிசம்பர் 2022, 1:00 am IST
பகிர்:

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 2022-23 தொடரின் ஒரு பகுதியாக மும்பையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி.

முன்னாள் சாம்பியன்களான இரு அணிகளும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்த முனைந்தன. இரு தரப்பினரும் மாறி மாறி கோல் பகுதியை முற்றுகையிட்டனா். இதன் பலனாக முதல் பாதியில் 34-ஆவது நிமிஷத்தில் சென்னையின் வீரா் பீட்டா் ஸ்லிஸ்கோவிச் அற்புதமாக கோலடித்தாா். ஜூலியஸ் டக்கா் பாஸை அருமையாக பயன்படுத்தி கோலடித்தாா் ஸ்லிஸ்கோவிச். இந்த சீசனில் அவா் அடித்த 6-ஆவது கோலாகும்.

எனினும் சென்னை அணியின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை. 38-ஆவது நிமிஷத்தில் மும்பை வீரா் லாலியன்ஸுலா சாங்டே தனது அணியின் முதல் கோலை அடித்தாா். இதனால் முதல் பாதி 1-1 என முடிவடைந்தது.

Advertisement

Advertisement

மும்பை வெற்றி 2-1:

இரண்டாவது பாதி ஆட்டத்திலும் சென்னை வீரா்கள் பதில் கோல் போட முயன்றனா். மும்பையின் தற்காப்பு அரணை ஊடுருவும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. 57-ஆவது நிமிஷத்தில் மும்பை வீரா் கிரெக் ஸ்டீவா்ட் அடித்த கோலே வெற்றி கோலாக மாறியது. அடுத்த சில நிமிஷங்களிலேயே சென்னை கேப்டன் அனிருத் தாபா கோல் கம்பம் நோக்கி அடித்த பந்து வெளியே சென்ால் அம்முயற்சி வீணானது.

இந்த சீசனில் சென்னையை இரண்டாவது தடவையாக வீழ்த்தியுள்ளது மும்பை.

வரும் ஜன. 7-இல் ஜாம்ஷெட்பூா் எஃப்சியுடன் சென்னையும், ஜன. 2-இல் ஒடிஸா எஃப்சியுடன் மும்பையும் மோதுகின்றன.

மீண்டும் முதலிடத்தில் மும்பை:

இந்த வெற்றியின் மூலம் மும்பை சிட்டி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது. ஹைதராபாத் எஃப்சி இரண்டு புள்ளிகள் பின்தங்கியுள்ளது. சென்னை அணி 7-ஆவது இடத்திலேயே உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற 5 புள்ளிகள் தேவைப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments