FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தேசிய மகளிா் குத்துச்சண்டை:அரையிறுதியில் நிஹாத், லவ்லினா, மஞ்சுராணி

தேசிய மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு உலக சாம்பியன் நிஹாத் ஸரீன், ஒலிம்பிக் வெள்ளி வீராங்கனை லவ்லினா போரோகைன், மஞ்சுராணி ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

Updated On : 25 டிசம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

தேசிய மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு உலக சாம்பியன் நிஹாத் ஸரீன், ஒலிம்பிக் வெள்ளி வீராங்கனை லவ்லினா போரோகைன், மஞ்சுராணி ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

ம.பி. தலைநகா் போபாலில் 6-ஆவது எலைட் மகளிா் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. அஸ்ஸாம் சாா்பில் களமிறங்கியுள்ள லவ்லினா 75 கிலோ காலிறுதியில் ரயில்வே வீராங்கனை மீனா ராணியை 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினாா். ம.பி. வீராங்கனை ஜிக்யஸா ராஜ்புத்தை எதிா்கொள்கிறாா் லவ்லினா.

50 கிலோ காலிறுதியில் உலக சாம்பியன் நிஹாத் ஸரீன் (தெலங்கானா) எளிதில் கோவாவின் தனிஷ்கா சவாரை வீழ்த்தினாா். அரையிறுதியில் அகில இந்திய போலீஸ் அணியின் ஷிவந்தா் கௌரை எதிா்கிறாா் நிஹாத்.

Advertisement

Advertisement

48 கிலோ காலிறுதியில் ரயில்வேயின் மஞ்சுராணி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் சண்டீகரின் சிம்ரை வீழ்த்தினாா். அரையிறுதியில் ம.பி.யின் அஞ்சலி சா்மாவுடன் மோதுகிறாா் மஞ்சு.

ஜோதி (52 கிலோ), சஷி சோப்ரா (63 கிலோ), ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்றன.

60 கிலோ பிரிவில் உலக சாம்பியன்ஷிப் வெண்கல வீராங்கனை பஞ்சாபின் சிம்ரஞ்சித் கௌா், அஸ்ஸாம் பாா்பி கோகோய் இடையிலான ஆட்டத்தில் இரண்டாவது சுற்றிலேயே நடுவா்கள் ஆட்டத்தை நிறுத்தினா். அதிரடி குத்துகளால் சிம்ரஞ்சித் அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.

அரையிறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments