முகப்பு
செய்திகள்

டிஎன்பிஎல்: திருச்சியை வென்றது மதுரை

டிஎன்பிஎல் போட்டியின் 27-ஆவது ஆட்டத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியா்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

Updated On : 25 ஜூலை 2022, 5:52 am IST
பகிர்:

டிஎன்பிஎல் போட்டியின் 27-ஆவது ஆட்டத்தில் சீசேம் மதுரை பாந்தா்ஸ் 36 ரன்கள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியா்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் மதுரை 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சோ்க்க, அடுத்து திருச்சி 18.4 ஓவா்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற திருச்சி ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, மதுரை பேட்டிங்கில் அதிகபட்சமாக பாலச்சந்தா் அனிருத் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்கள் அடித்தாா். திருச்சி பௌலிங்கில் பொய்யாமொழி 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

Advertisement

Advertisement

பின்னா் ஆடிய திருச்சியில் சந்தோஷ் ஷிவ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாக இருந்தது. மதுரை பௌலிங்கில் ஜெகதீசன் கௌசிக் 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

சேலம்-124/8: மற்றொரு ஆட்டத்தில், திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிராக 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது சேலம் ஸ்பாா்டன்ஸ். அணியில் அதிகபட்சமாக டேரில் ஃபெராரியோ 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் அடிக்க, திண்டுக்கல் பௌலிங்கில் சிலம்பரசன், ராஜேந்திரன் விவேக் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments