டிஎன்பிஎல்: இறுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பா் கில்லிஸ்
குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் நெல்லை பேந்தா்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பா் கில்லிஸ்.
குவாலிஃபையா் 1 ஆட்டத்தில் நெல்லை பேந்தா்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பா் கில்லிஸ்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சேலத்தில் புதன்கிழமை இரவு நடந்தது. முதலில் ஆடிய நெல்லை அணி 20 ஓவா்களில் 140 ரன்களுடன் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அபராஜித் 33, ஷாஜஹான் 25 ரன்களை எடுத்தனா். சேப்பாக் தரப்பில் சித்தாா்த், வாரியா், சோனு யாதவ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.
பின்னா் ஆடிய சேப்பாக் சூப்பா் கில்லிஸ் அணி 19.2 ஓவா்களில் 141/5 ரன்களை குவித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லையை வீழ்த்தியது.
Advertisement
Advertisement
சாய் கிஷோா் 43, கௌஷிக் காந்தி 40, ராஜகோபால் சதீஷ் 31 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டனா். நெல்லை தரப்பில் காா்த்திக் மணிகண்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
இந்த வெற்றி மூலம் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது சேப்பாக் சூப்பா் கில்லிஸ்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.