செஸ் ஒலிம்பியாட்: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2ஆவது சுற்று போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2ஆவது சுற்று போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய 6 ஆட்டங்களிலும் 4-0 என முழுமையாக வெற்றி பெற்றது.
இதையும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்: இரண்டாவது சுற்றில் நந்திதா வெற்றி
Advertisement
Advertisement
இன்று தொடங்கிய 2-வது சுற்று போட்டியில் இந்திய பி அணி எஸ்டோனியாவை எதிர்கொண்டது. இந்திய பி அணியில் உள்ள தமிழக வீரர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், அதிபன் மற்றும் ருனாக் சாத்வனி ஆகியோர் விளையாடினர்.
இந்நிலையில் எஸ்டோனியா வீரர் கிரில் சுகாவை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். இரண்டாது சுற்று போட்டியில் பிரக்ஞானந்தாவுடன் இந்திய வீரர் அதிபன், குகேஷ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இந்தியாவின் 6 அணிகளில் 3 அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.