முகப்பு
செய்திகள்

உலகக் கோப்பை: நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்த மேலும் 4 அணிகள்!

உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மேலும் 4 அணிகள் தகுதியடைந்துள்ளன.

Updated On : 30 நவம்பர் 2022, 12:15 pm IST
கோலடித்த இங்கிலாந்து
பகிர்:

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு மேலும் 4 அணிகள் தகுதியடைந்துள்ளன.  

பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளும் இரு ஆட்டங்களிலேயே காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதியடைந்தன. இந்நிலையில் தற்போது மேலும் 4 அணிகள் அடுத்தச் சுற்றுக்குத் தகுதியடைந்தன. 

நேற்றைய ஆட்டத்தில் செனகல் அணி ஈகுவடாரை 2-1 எனவும் நெதர்லாந்து அணி செனகலை 2-0 எனவும் அமெரிக்க அணி ஈரானை 1-0 எனவும் இங்கிலாந்து அணி வேல்ஸை 3-0 எனவும் தோற்கடித்தன. இதையடுத்து நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 4 அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குப் புதிதாகத் தகுதியடைந்துள்ளன. ஆக இதுவரை 7 அணிகள் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்னும் 9 அணிகள் தகுதி பெற வேண்டிய நிலைமையில் உள்ளன. 

Advertisement

Advertisement

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இரு ஆட்டங்களில் எந்தந்த அணிகள் மோதவுள்ளன என்பது தெரியவந்துள்ளது. டிசம்பர் 3 அன்று அமெரிக்கா - நெதர்லாந்து அணிகளும் டிசம்பர் 4 அன்று இங்கிலாந்து - செனகல் அணிகளும் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments